(1651)

(1651)

தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,

போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,

கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

தார் ஆய தண் துளபம்

மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள

வண்டு

வண்டுகளாலே

உழுத

(தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட

வரை மார்பன்

மலைபோன்ற திருமார்பை யுடையவன்

என்கின்றாள் ஆல்;

போர் ஆனை

போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய

கொம்பு ஒசித்த

தந்தங்களை முறித்தொழித்த

புள் பாகன்

கருடவாஹநன்

என் அம்மான்

எனக்கு ஸ்வாமி

என்கின்றாள் ஆல்;

ஆரானும் காண்மின்கள்

யாராகிலும்பாருங்கள்

அவனுக்கு

அப்பெருமானுடைய

வாய்

திருவதரமானது

அம் பவளம்

அழகிய பவளம் போல் சிவந்தது

என்கின்றாள் ஆல்… ;

கார் வானம்

கறுத்த மேகம்

நின்று அதிரும்

நிலைநின்று கோஷிக்கப்பெற்ற

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….

 

English Translation

Nectared and bee-fragrant garland of cool Tulasi on chest!”, she says, “My Lord the bird rider broke a tusk from rutted elephant”, she says, “Take a look, his coral lips are so matchiessly perfect”, she says. Dark-thunder-clouds-over-Kannapuram, has she then seen him? Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top