(1650)

(1650)

துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல்  தோன்றுமால் என்கின் றாளால்,

மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,

பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,

கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

துன்னு

நெருங்கியிருக்கின்ற

மா மணி

சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற

முடி மேல்

கிரீடத்தின் மீது

துழாய் அலங்கல்

திருத்துழாய் மாலை

தோன்றும ஆல் என்கின்றாள் ஆல்

விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;

மின்னு

ஜ்வலிக்கின்ற

மா மணி

சிறந்த மணிகளழுத்தின

மகர குண்டலங்கள்

மகரக் குழைகள்

வில் வீசும் என்கின்றாள் ஆல்

ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ;

பொன்னின் மா மணி ஆரம்

பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது

அணி ஆகத்து

அழகிய திருமார்பிலே

இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல்

விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ;

கன்னி மா மதில்

அழிவில்லாத பெரிய மதிள்களாலே

புடை சூழ்

நாற்புறமும் சூழப்பட்ட

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….

 

English Translation

“Over his fall germ crown he wears a wreath of fresh Tulasi”, she says. “His Makara fish ear-rings, gold set with germs, flash like lightening”, she says, “His gold-and-gern-necklace sways on his jewel-mighty broad chest”, she syas. Strong mighty walls rise in kannapuram, has she then seen him< Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top