(1652)

(1652)

அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால்,

முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால்,

வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால்,

கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

அடித்தலமும்

திருவடிகளும்

தாமரையே

தாமரைப்பூவே;

அம் கைகளும்

அழகிய திருக்கைகளும்

பங்கயமே

தாமரைப்பூவே;

என்கின்றாள் ஆல்…,

முடித்தலமும்

கிரீடமும்

பொன் பூணும்

(அதிலிழைத்த) திருவாபரணமும்

என் நெஞ்சத்துள் அகலாது

என் மனத்தைவிட்டுப் பிரியாது

என்கின்றாள் ஆல்…. ;

வடி

கூர்மை பொருந்திய

தட கண்

பெரிய கண்களையுடையளான

மலரவளோ

பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்

வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள்

மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;

கடி கமலம்

பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்

கள் உகுக்கும்

தேனைப் பொழியப் பெற்ற

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…,

 

English Translation

“His feet are gold-lotus his hands are lotus hue-golden”, she says. His crown and golden jewels never leave my frail heart, O!” She says, alas! “Does not the dame-lotus-Lakshmi resides on his wide chest?”, She says, sweet-scented-lotus-in-kannapuram has she then seen him?, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top