(16)
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.
பதவுரை
| ஆய்ப்பாடி |
– |
திருவாய்ப்பாடியிலுள்ள |
| ஆயர் |
– |
இடையர்கள் |
| உறியை |
– |
(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை |
| முற்றத்து |
– |
முற்றத்திலே |
| உருட்டி நின்று |
– |
உருட்டிவிட்டு |
| ஆடுவார் |
– |
கூத்தாடுவார் சிலரும், |
| நறு |
– |
மணம்மிக்க |
| நெய் பால்தயிர் |
– |
நெய்யையும் பாலையும் தயிரையும் |
| நன்றாக |
– |
நிச்சேஷமாக |
| தூதுவார் |
– |
தாநம் பண்ணுவார் சிலரும், |
| செறி மென் |
– |
நெருங்கி மெத்தென்றிருக்கிற |
| கூந்தல் |
– |
மயிர்முடியானது |
| அவிழ |
– |
அவிழ்ந்து கலையும்படி |
| திளைத்து |
– |
நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக, |
| எங்கும் |
– |
சேரியடங்கலும் |
| அறிவு அழிந்தனர் |
– |
தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் சிலர்; நெய் பால் தயிர் முதலியவற்றை அபாரமாக தானஞ் செய்தார்கள் சிலர்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள் சிலர் ஆகவிப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும் ஸந்தோஷப் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் உன்மத்தரானார்கள்.
நன்றாகதூவுவார் என்றவிடத்து நன்று ஆக – (பிள்ளைக்கு) நன்மையுண்டாகும்படி என்று முரைக்கலாம்.
English Translation
The cowherd -folk poured out good milk, curds and Ghee from rope-shelf, overturned the empty post in the portico and danced on them tossing their disheveled hair, and lost their minds.
