(17)

(17)

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

பதவுரை

தான்கொண்ட

கால்நெருக்கத்தையுடைய
உறி

உறிகளையும்
கோலம்

அழகிய
கெரடு

கூர்மையான
மழு

மழுக்களையும்
தண்டினர்

கடிகளையுமுடையராய்
பறி

(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை

ஓலைகளினாற்செய்த
சயனத்தர்

படுக்கையையுடையராய்
விண்ட

விசுஹித்த
முல்லை அரும்பு அன்ன

முல்லையரும்பு போன்ற
பல்லினர்

பற்களையுடையவரான
அண்டர்

இடையரானவர்கள்
மிண்டி

(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்

நெய்யாடல் ஆடினார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள்.  நெய்யாடலாவது  – ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்; எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம்.

‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு –  மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற (வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் –  இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.

English Translation

Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fibre; they smeared themselves with Ghee and danced.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top