(17)
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.
பதவுரை
| தான்கொண்ட |
– |
கால்நெருக்கத்தையுடைய |
| உறி |
– |
உறிகளையும் |
| கோலம் |
– |
அழகிய |
| கெரடு |
– |
கூர்மையான |
| மழு |
– |
மழுக்களையும் |
| தண்டினர் |
– |
கடிகளையுமுடையராய் |
| பறி |
– |
(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட |
| ஓலை |
– |
ஓலைகளினாற்செய்த |
| சயனத்தர் |
– |
படுக்கையையுடையராய் |
| விண்ட |
– |
விசுஹித்த |
| முல்லை அரும்பு அன்ன |
– |
முல்லையரும்பு போன்ற |
| பல்லினர் |
– |
பற்களையுடையவரான |
| அண்டர் |
– |
இடையரானவர்கள் |
| மிண்டி |
– |
(ஒருவருக்கொருவர்) புகுந்து |
| நெய் ஆடினார் |
– |
நெய்யாடல் ஆடினார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள். நெய்யாடலாவது – ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்; எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம்.
‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு – மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற (வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் – இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.
English Translation
Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fibre; they smeared themselves with Ghee and danced.
