(1340)
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே.
பதவுரை
|
முன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி |
– |
முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (அந்த நாகத்தை) |
|
அலக்கழித்து |
– |
வருந்தும்படிபண்ணி |
|
அவன் தன் படம் இற பாய்ந்து |
– |
அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து) |
|
பல் மணி சிந்த |
– |
(படத்திலுள்ள) மணிகளெல்லாம் சிந்தும்படியாக |
|
பல் நடம் பயின்றவன் கோயில் |
– |
(அப்படங்களின் மீது நின்று) பலவகை நர்த்தனங்களைப் பண்ணின பெருமான் ஸந்நிதி (எதுவென்னில்) |
|
படம் அரவு அல்குல் பாவை நல்லார்கள் |
– |
படமெடுத்த பாம்போடொத்த நிதம்பத்தையுடையரான அழகிய மாதர்கள் |
|
பயிற்றிய நாடகத்து |
– |
பழகிய நாடகத்தினுடைய |
|
ஒலி |
– |
ஓசையானது |
|
அடை புடை போய் தழுவி |
– |
அடுத்த பக்கங்களிலெங்கும் சென்று பரவி |
|
அண்டம் நின்று அதிரும் |
– |
ஆகாசத்திலுஞ் சென்று அதிரப்பெற்ற |
|
திருவெள்ளியங்குடி அதுவே |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடைபுடை=அடை – அடுத்திருக்கிற, புடை – பக்கங்களிலெல்லாம் என்று பொருளுரைக்கப்பட்டது. பெரியவாச்சான்பிள்ளை யருளிய வியாக்கியானத்தில் “ (அடைபுடைதழுவி) அஹோராத்ர மணைந்து ஆகாசத்திலே நின்று கோஷியா நிற்குமாய்த்து” என்று காணப்படுதலால் “அடைபுடை” என்பதற்கு ‘இரவும் பகலும்’ என்று பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது; இச்சொல் இப்பொருளில் சில நாடுகளில் வழங்கப்படுவதாக இருந்ததுபோலும்.
English Translation
He who in yore went and disturbed the terrible venom-spitting Kaliya’s water haunt, leapt on his many heads, dancing his feet on it, spilling the gems from it, lives where thin-like-the-serpent-waisted good dames there practise the art of good dancing, the sound of their ensemble fills everywhere in Tiruvelliyangudi, that is it!
