(1341)
கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,
பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,
செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே.
பதவுரை
|
முன் கறவை காத்து |
– |
முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும் |
|
கஞ்சனை காய்ந்த |
– |
கம்ஸனைச் சீறி முடித்தவனாயும் |
|
காள மேகம் திருஉருவன் |
– |
காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும் |
|
பறவை முன் உயர்த்து |
– |
பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும் |
|
பாற்கடல் துயின்ற |
– |
திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற |
|
பரமனார் |
– |
ஸர்வேச்வரன் |
|
பள்ளி கொள் கோயில் |
– |
சாய்ந்தருளுமிடம் (எதுவென்றால்) |
|
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் |
– |
எல்லாத் துறைகளிலும் பொன்களையும் மணிகளையும் கொழிக்கின்ற |
|
தொகு திரை |
– |
திருண்ட அலைகளை யுடைத்தான |
|
மண்ணியின் தென்பால் |
– |
மண்ணியாற்றின் தென்கரையிலே, |
|
செறி மணி மாடம் கொடி கதிர் அணவும் |
– |
நெருங்க இழைக்கப்பட்ட மாணிக்கங்களை யுடைத்தான மாட மாளிகைகளிலுள்ள த்வஜங்கள் ஸூர்ய மண்டலத்தை ஸ்பர்சித்திருக்கப்பெற்ற |
|
திருவெள்ளியங்குடி அதுவே–. |
||
English Translation
He who in yore grazed cows and killed kamsa, benevolent-as-the-rain-cloud form, bore the Garuda banner, and slept in the Milk Ocean, reclines in the temple,-on the Southern banks of Manni with flooding waters, which desposits wave after wave of gold everywhere, and where fall jewel-mansions play with the sun above, -of Tiruvelliyangudi, that is it!
