(1341)

(1341)

கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,

பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,

செறிமணி மாடக் கொடிகதி ரணவும்  திருவெள்ளி யங்குடி யதுவே.

 

பதவுரை

முன் கறவை காத்து

முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும்

கஞ்சனை காய்ந்த

கம்ஸனைச் சீறி முடித்தவனாயும்

காள மேகம் திருஉருவன்

காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும்

பறவை முன் உயர்த்து

பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும்

பாற்கடல் துயின்ற

திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற

பரமனார்

ஸர்வேச்வரன்

பள்ளி கொள் கோயில்

சாய்ந்தருளுமிடம் (எதுவென்றால்)

துறை துறை தோறும் பொன் மணி சிதறும்

எல்லாத் துறைகளிலும் பொன்களையும் மணிகளையும் கொழிக்கின்ற

தொகு திரை

திருண்ட அலைகளை யுடைத்தான

மண்ணியின் தென்பால்

மண்ணியாற்றின் தென்கரையிலே,

செறி மணி மாடம் கொடி கதிர் அணவும்

நெருங்க இழைக்கப்பட்ட மாணிக்கங்களை யுடைத்தான மாட மாளிகைகளிலுள்ள த்வஜங்கள் ஸூர்ய மண்டலத்தை ஸ்பர்சித்திருக்கப்பெற்ற

திருவெள்ளியங்குடி அதுவே–.

 

English Translation

He who in yore grazed cows and killed kamsa, benevolent-as-the-rain-cloud form, bore the Garuda banner, and slept in the Milk Ocean, reclines in the temple,-on the Southern banks of Manni with flooding waters, which desposits wave after wave of gold everywhere, and where fall jewel-mansions play with the sun above, -of Tiruvelliyangudi, that is it!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top