(1339)
ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டு அரக்கர்தம் சிரங்களை யுருட்டி,
கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,
பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி,
தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே.
பதவுரை
|
அன்று |
– |
முற்காலத்தில் |
|
ஆ நிரை மேய்த்து |
– |
(கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும் |
|
அலை கடல் அடைத்திட்டு |
– |
அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று) |
|
அரக்கர்தம் சிரங்களை உருட்டி |
– |
ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும் |
|
கார்நிறை மேகம் கலந்தது |
– |
கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த |
|
ஓர் உருவம் |
– |
விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற |
|
கண்ணனார் |
– |
கண்ணபிரான் |
|
கருதிய கோயில் |
– |
திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்) |
|
நிரை பூ |
– |
வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற |
|
செருந்தி |
– |
ஸுரபுன்னை மரங்களினுடையவும் |
|
முத்து அரும்பி |
– |
முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற |
|
புன்னை |
– |
புன்னை மரங்களினுடையவும் |
|
பொதும்பிடை |
– |
பொந்துகளிலே |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வரிவண்டு மிண்டி அங்கு தேன் இரைத்து உண்டு – அழகிய வண்டுகள் நெருங்கியிருந்து அவ்விடத்தில் மதுவை ஆரவாரத்தோடே பருகி இன் இசை முரலும் – மதுரமான இசைகளைப்பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளியங்குடி அதுவே.
English Translation
The Lord who then grazed cows, built a bridge on the ocean and killed all the Rakshasa, has the dark hue of rain-laden cloud is Krishna the Lord who resides in flower groves of Punnai, spilling their pearl buds, -Serund! trees harbouring bumble-bees drinking the nectar, singing in temple of iruvelliyangudi, that is it!
