(1375)

(1375)

முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,

அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,

மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,

தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே!

 

பதவுரை

மன்னு கேதகை சூதகம் என்ற இவை

மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான

வனத்து இடை

சோலைகளின் நடுவே

சுரும்பு இனங்கள்

‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம்

தேன்ன என்ன

‘தென்னதென்ன’ என்றுபாட,

வண்டு

(சாதாரண) வண்டுகளானவை

இன் இசை முரல்

இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற

திருவெள்ளறை, நின்றானே!;

முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி

முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு

இருள் மிக

அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே

உம்பர்கள் தொழுது ஏத்த

தேவர்கள் வணங்கித் துதிக்க

அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே

அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே!

எனக்கு அருள்புரி–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சுரும்பு என்பதும் வண்டு என்பதும் பரியாயமென்று பலர் நினைத்திருப்பதுண்டு: பரியாயமென்று கொள்ளலாமாயினும் ஜாதிபேதமுண்டு.  இதனை யறியாமல், இப்பாட்டில் மூன்றாமடியில் ‘சுரும்பினங்கள்’ என்று வந்திருக்க, மீண்டும் நான்காமடியில் ‘வண்டு’ என வருவது ஒவ்வாதென்றெண்ணிச் சிலர் பாடத்தை மாறுபடுத்தினர் – “தென்னதென்னவென்றின்னிசை முரல்” எனத் திருத்தினர்.  அதுவேண்டா; “தென்னவென்ன, வண்டின்னிசை முரல்” என்ற ஆன்றோர்பாடமே கொள்ளத்தக்கது. சுரும்பு சாதி வேறு, வண்டுசாதிவேறு என்க.  கீழ் (5-1-1) “அறிவதரியான்” என்ற பாட்டில் “நறிய மலர்மேல் சுரும்பாதுக்க…சிறை வண்டிசைபாடும்” என வந்ததும் குறிக்கொள்ளத்தக்கது.

கேதகை, சூதகம் – வடசொல் விகாரங்கள்

 

English Translation

O Lord residing in Tiruvellarai, amid screwpine-lined fields and Mango orchards where bees hum “Tena Tena’ and bumble-bees sing songs over the drone!  In the yore when the seven worlds were enveloped by the darkness of ignorance, you came as a swan worshipped by the celestials, and created the precious Vedas.  Pray grace me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top