(1375)
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே!
பதவுரை
|
மன்னு கேதகை சூதகம் என்ற இவை |
– |
மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான |
|
வனத்து இடை |
– |
சோலைகளின் நடுவே |
|
சுரும்பு இனங்கள் |
– |
‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம் |
|
தேன்ன என்ன |
– |
‘தென்னதென்ன’ என்றுபாட, |
|
வண்டு |
– |
(சாதாரண) வண்டுகளானவை |
|
இன் இசை முரல் |
– |
இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற |
|
திருவெள்ளறை, நின்றானே!; |
||
|
முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி |
– |
முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு |
|
இருள் மிக |
– |
அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே |
|
உம்பர்கள் தொழுது ஏத்த |
– |
தேவர்கள் வணங்கித் துதிக்க |
|
அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே |
– |
அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே! |
|
எனக்கு அருள்புரி–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சுரும்பு என்பதும் வண்டு என்பதும் பரியாயமென்று பலர் நினைத்திருப்பதுண்டு: பரியாயமென்று கொள்ளலாமாயினும் ஜாதிபேதமுண்டு. இதனை யறியாமல், இப்பாட்டில் மூன்றாமடியில் ‘சுரும்பினங்கள்’ என்று வந்திருக்க, மீண்டும் நான்காமடியில் ‘வண்டு’ என வருவது ஒவ்வாதென்றெண்ணிச் சிலர் பாடத்தை மாறுபடுத்தினர் – “தென்னதென்னவென்றின்னிசை முரல்” எனத் திருத்தினர். அதுவேண்டா; “தென்னவென்ன, வண்டின்னிசை முரல்” என்ற ஆன்றோர்பாடமே கொள்ளத்தக்கது. சுரும்பு சாதி வேறு, வண்டுசாதிவேறு என்க. கீழ் (5-1-1) “அறிவதரியான்” என்ற பாட்டில் “நறிய மலர்மேல் சுரும்பாதுக்க…சிறை வண்டிசைபாடும்” என வந்ததும் குறிக்கொள்ளத்தக்கது.
கேதகை, சூதகம் – வடசொல் விகாரங்கள்
English Translation
O Lord residing in Tiruvellarai, amid screwpine-lined fields and Mango orchards where bees hum “Tena Tena’ and bumble-bees sing songs over the drone! In the yore when the seven worlds were enveloped by the darkness of ignorance, you came as a swan worshipped by the celestials, and created the precious Vedas. Pray grace me!
