(1365)
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று,
இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே!
பதவுரை
|
கலை |
– |
ஆண்மான்கள் |
|
பிணையோடு |
– |
பெண்மான்களோடு |
|
அணை வாழும் |
– |
சேர்ந்து வாழும்படியான |
|
திருநீர்மலை |
– |
திருநீர்மலையிலே |
|
வாழ் |
– |
வாழ்கின்ற |
|
எந்தை |
– |
எம்பெருமான் |
|
மருவும் |
– |
பொருந்திவாழப்பெற்ற |
|
ஊர் |
– |
திவ்யதேசம்;- |
|
இலை தாழ் |
– |
மட்டைகள் தழைத்திருக்கிற |
|
தெங்கின் மேல் நின்ற |
– |
தென்னைமரங்களின் மேலிருக்கிற |
|
இளநீர் குலை |
– |
இளநீர்க் குலைகள் |
|
தாழ் |
– |
(தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற |
|
கடங்கின் |
– |
நீர்நிலைகளையுடைய |
|
கூடலூர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இலைதாழ் இத்யாதி.) படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டான இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிற போது, குளங்களை இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்துவைத்தாற்போலே யிருக்குமாயிற்று. நின்ற + இளநீர், நின்றிளநீர்; தொகுத்தல்.
English Translation
The Lord who resides in Tirunirmalai with deer-pairs resting in company has come to reside in Kudolur where coconut bunches hang low on trees, over leaves of the Betel Creeper that surrounds it.
