(1365)

(1365)

கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்

மலைவா ழெந்தை மருவு மூர்போல்,

இலைதாழ் தெங்கின் மேல்நின்று,

இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே!

 

பதவுரை

கலை

ஆண்மான்கள்

பிணையோடு

பெண்மான்களோடு

அணை வாழும்

சேர்ந்து வாழும்படியான

திருநீர்மலை

திருநீர்மலையிலே

வாழ்

வாழ்கின்ற

எந்தை

எம்பெருமான்

மருவும்

பொருந்திவாழப்பெற்ற

ஊர்

திவ்யதேசம்;-

இலை தாழ்

மட்டைகள் தழைத்திருக்கிற

தெங்கின் மேல் நின்ற

தென்னைமரங்களின் மேலிருக்கிற

இளநீர் குலை

இளநீர்க் குலைகள்

தாழ்

(தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற

கடங்கின்

நீர்நிலைகளையுடைய

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இலைதாழ் இத்யாதி.) படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டான இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிற போது, குளங்களை இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்துவைத்தாற்போலே யிருக்குமாயிற்று.  நின்ற + இளநீர், நின்றிளநீர்; தொகுத்தல்.

 

English Translation

The Lord who resides in Tirunirmalai with deer-pairs resting in company has come to reside in Kudolur where coconut bunches hang low on trees, over leaves of the Betel Creeper that surrounds it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top