(1401)

(1401)

வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,

தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்

பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்

அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,

 

பதவுரை

தடங் கடலுள் வளர்ந்தவனை

விசாலமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளபவனும்

வலி உருவின் திரி சகடம்

வலிவுள்ள சரீரத்தை யுடைத்தாய்க்கொண்டு ஊர்ந்து வந்த (அஸுரனாலாவேசிக்கப்பட்ட) சகடமானது

தளர்ந்து உதிர உதைத்தவனை

கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும்

அன்று தரியாது இரணியனை பிளந்தவனை

ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும்,

பண்டு ஒருகால்

மற்றுமொருகாலத்தில்

ஈர் அடி நீட்டி

இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து

பெருநிலம் அளந்தவனை

விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை

யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

`     ***- இரண்டாமடியில் ‘உதிர’ என்றும் ‘அதிர’ என்றும் பாடபேதமுண்டு; அதிர – அதிர்ச்சியுண்டாம்படி.

தரியாது – தன்விஷயத்திலே எத்தனை தீங்குசெய்தாலும் தரித்திருப்பன் எம்பெருமான்; தனது உயிர்நிலையான அடியவர் திறத்தில் தீங்கு செய்தால் ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டானென்க.

 

English Translation

The Lord who reclines in the ocean, the Lord who smote a bedevilled cart to smithers, the one who tore Hiranya’s chest, the one who came as a manikin, then grew and took the Earth, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top