(1411)

(1411)

மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி,

பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர,

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப,

ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,

 

பதவுரை

மா இரு குன்றம் ஒன்று

அகன்றும் உயர்ந்துமிருக்கிற (மந்தரமென்னும்) ஒருமலையை

மத்து ஆக

மத்தாகக்கொண்டு

அதனொடும்

அம்மலையிலே

மாசுணம்

(வாஸுகியென்னும); நாகத்தை

அளவி

சுற்றி,

பா இரு பௌவம்

பரந்தும் நீண்டுமிருக்கிற ஸமுத்ரம்.

பகடு விண்டு அலற

யானைபிளிறுமா போலே பிளிறவும்

படு திரை

உண்டான அலைகள்

விசும்பிடை படர

ஆகாசத்திலே சென்றுகிட்டி வியாபிக்கவும்

சே இரு விசும்பும்

மிக்க உயரத்திலுள்ள ஸ்வர்க்காதி லோகங்களும்

திங்களும்

சந்திரமும்

சுடரும்

(மற்றுமுள்ள) தேஜஸ் பதார்த்தங்களும்

தேவர் தாமும்

தேவதைகளும்

உடன்

எக்காலத்திலே

திசைப்ப

ஆச்சரியப்படவும்

அலைகடல்

அலையெறிகின்ற கடலை

ஆயிரம் தோளால்

பல திருக்கைகளினால்

கடைந்தான்

கடைந்தருளினவன்

அரங்கம் மா நகர் அமர்ந்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பகடு விண்டு அலற – ‘பகடு’ என்னுஞ் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ‘யானை’ என்னும் பொருள் இங்குக்கொள்ளவுரியது. உவமவுருபு தொக்கியிருக்கின்றதென்க.  விண்டுவாய்விரிந்து.

“ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்” என்கிறாரே, இப்படி உண்டோ? என்னில்; “நாலு தோள்கொண்டு வ்யாபரித்தபடிதான் ஆயிரந் தோள்கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படியாய்த்து” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகண்டு தெளிக.

 

English Translation

Rolling the big serpent Vasuki over the big mountain Mandara, the Lord churned the ocean with a thousand arms.   The ocean opened its mouth and roared, the waves splashed sky-high.  The heavens, the Sun, the Moon, the gods and the celestials, all witnessed the wonder spell-bound.  He is the resident of Arangama-Nagar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top