(129)
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.
பதவுரை
| எம் பிரான் |
– |
எமது உபகாரகனே! |
| வைத்த நெய்யும் |
– |
உருக்கி வைத்த நெய்யும் |
| காய்ந்த பாலும் |
– |
(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும் |
| வடி தயிரும் |
– |
(உள்ளநீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் |
| நறு வெண்ணெயும் |
– |
மணம்மிக்க வெண்ணெயும் |
| இத்தனையும் |
– |
(ஆகிய) இவையெல்லாவற்றையும் |
| நீ பிறந்தபின்னை |
– |
நீ பிறந்த பிறகு |
| பெற்று அறியேன் |
– |
கண்டதில்லை; |
| எத்தனையும் |
– |
(நீ) வேண்டிணபடியெல்லாம் |
| செய்யப்பெற்றாய் |
– |
நீ செய்யலாம்; |
| எதும் செய்யேன் |
– |
(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்யமாட்டேன்; |
| கதம் படாதே |
– |
நீ கோபியாதே கொள்; |
| முத்து அனைய முறுவல் செய்து |
– |
முத்தைப்போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம்பண்ணி |
| மூக்கு உறிஞ்சி |
– |
மூக்கை உறிஞ்சிக்கொண்டு |
| முலை உணாய் |
– |
முலை உண்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம். கதம் – கோபம். குழந்தைகள் மூக்குறிஞ்சி முலையுண்ணுதல் – இயல்பு.
English Translation
My master, ever since you were born, I know not where all the saved Ghee, boiled milk, drained curds and fresh butter went. You go on doing what you want; I do nothing lest I anger you. Making a pearly smile, sniffing your nose, go ahead and take suck!
