(129)

(129)

வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை

எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே

முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.

பதவுரை

எம் பிரான்

எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்

உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்

(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்

(உள்ளநீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்

மணம்மிக்க வெண்ணெயும்
இத்தனையும்

(ஆகிய) இவையெல்லாவற்றையும்
நீ பிறந்தபின்னை

நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்

கண்டதில்லை;
எத்தனையும்

(நீ) வேண்டிணபடியெல்லாம்
செய்யப்பெற்றாய்

நீ செய்யலாம்;
எதும் செய்யேன்

(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்யமாட்டேன்;
கதம் படாதே

நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து

முத்தைப்போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம்பண்ணி
மூக்கு உறிஞ்சி

மூக்கை உறிஞ்சிக்கொண்டு
முலை உணாய்

முலை உண்பாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம்.  கதம் – கோபம்.  குழந்தைகள் மூக்குறிஞ்சி முலையுண்ணுதல் – இயல்பு.

English Translation

My master, ever since you were born, I know not where all the saved Ghee, boiled milk, drained curds and fresh butter went.  You go on doing what you want; I do nothing lest I anger you.  Making a pearly smile, sniffing your nose, go ahead and take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top