(128)
அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ
வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.
பதவுரை
| அரவு அணையாய் |
– |
சேஷசாயியானவனே! |
| ஆயர் ஏறே |
– |
இடையர்களுக்குத் தலைவனே! |
| நீ இரவும் உண்ணாத |
– |
நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல் |
| உறங்கிப் போனாய் |
– |
உறங்கிப்போய்விட |
| இன்றும் |
– |
இப்போதும் |
| உச்சி கொண்டது |
– |
(பொழுது விடிந்து) உச்சிப்போதாய்விட்டது; |
| ஆல் |
– |
ஆதலால் |
| அம்மம் உண்ண |
– |
முலையுண்பதற்கு |
| துயில் எழாய் |
– |
(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்; |
| வரவும் காணேன் |
– |
(நீயே எழுந்திருந்து அம்மமுண்ணவேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்! |
|
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா) |
||
| வயிறு அசைத்தாய் |
– |
வயிறுந்தளர்ந்து நன்றாய்; |
| வன முலைகள் |
– |
(எனது) அழகிய முலைகள் (உன்மேல் அன்பினால் நெறித்து) |
| சோர்ந்து பாய |
– |
பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க |
| திரு உடைய |
– |
அழகை உடைய |
| வாய் மடுத்து |
– |
(உன்) வாயை வைத்து |
| திளைத்து |
– |
செருக்கி |
| உதைத்து |
– |
கால்களாலே உதைத்துக் கொண்டு |
| பருகிடாய் |
– |
முலையுண்பாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – (அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும் சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான கரத்திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க. அம்ம முண்ண என்றது – கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும். சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத்தரும். இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் – ஆதலால் என்பதன் சிதைவு; இனி ஆல் ஓ – இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம். வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க. வனப்புமுலை என்கிறவிது – வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்; வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற நகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.
English Translation
O cowherd child, Lord who reclines on a serpent-bed, wake up to take suck. Last night you went to sleep without supper, it is almost mid-day now. I do not see you coming. Your belly is flat, my heavy breasts are overflowing. Place your auspicious lips and take suck, beating and kicking.
