(127)

(127)

வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த

வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த

சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்

வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.

பதவுரை

வல்லாள்

பலசாலிகளான வீரர்களையுடைய
இலங்கை

லங்கையானது
மலங்க

பாழாம்படி
சரம் துரந்த

அம்பைச் செலுத்திய
வில் ஆளனை

வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டுசித்தன்

பெரியாழ்வார்
விரித்த

பரக்ககூறிய
சொல் ஆர்ந்த

சொல் நிரம்பிய
அப்பூச்சி பாடல் இவை பத்தும்

அப்பூச்சி காட்டுதலைப் பற்றிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்

கற்கவல்லவர்
போய்

(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்

ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்

நித்யவாஸம் பண்ணப்பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சொல்லார்ந்த பாடலிவை பத்தும் = இத்திருமொழியில் அர்த்தத்தைக் கவனிக்கவேணுமென்கிற கஷ்டமும் வேண்டா; சொல்லே பரமபோக்யம் என்று கருத்து.  இச்செய்யுள் வெண்டளையால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாதலால் “விட்டுசித்தன் விரித்தன” என்று பாடமானால் தளைக்குப் பொருந்தும்.  ??? – வடசொல்.

அடிவரவு:- மெச்சு மலை காயும் இருட்டு சேப்பூண்ட செப்பு தத்துக் கொங்கை பதகம் வல்லாள் அரவணை.

English Translation

This decad of Appuchi songs by Vishnuchitta sing the praise of the bow-wielding Lord who rained arrows and burnt the Rakshasa’s Lanka.  Those who master it will go and live in Vaikuntha forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top