(126)

(126)

பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன

உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த

அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

பதகம்

பாதிக்குந் தன்மையையுடைய
முதலை

முதலையில்
வாய்

வாயிலே
பட்ட

அகப்பட்ட
களிறு

ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி

(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி

கையைக் குவித்துக்கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன

என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
அங்கு

அப்போதே
உதவ

(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து

பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறுதுயர்

(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த

போக்கின
அதகன்

(ஆச்ரிதாக்ஷணத்தில்) மிடுக்கையுடையவன்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பதகம் – ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; ??? என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற) பாபத்தையுடையவனென்று பொருளாம்.  உறுதுயர் – ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று.  உறு – மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல்.  களிறு – யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் – பிடி).  களி – மதக்களிப்பு; அதனையுடையது – களிறு எனக் காரணக்குறி; று – பெயர்விகுதி; ஒன்றன்பால் விகுதியெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால்.  அதன் – ஹதகன்; ஆச்ரிதவிரோதியை ஹதம்பண்ணுமவன்.

English Translation

The elephant caught in the jaws of the vicious crocodile bellowed folded hands and cried, “Krishna, O My Krishna, Help!” My Lord and master drove his bird Garuda thither and saved him from distress.  He comes and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top