(126)
பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன
உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த
அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பதவுரை
| பதகம் |
– |
பாதிக்குந் தன்மையையுடைய |
| முதலை |
– |
முதலையில் |
| வாய் |
– |
வாயிலே |
| பட்ட |
– |
அகப்பட்ட |
| களிறு |
– |
ஸ்ரீகஜேந்த்ராழ்வான் |
| கதறி |
– |
(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு |
| கை கூப்பி |
– |
கையைக் குவித்துக்கொண்டு |
| என் கண்ணா கண்ணா என்ன |
– |
என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க |
| அங்கு |
– |
அப்போதே |
| உதவ |
– |
(அந்த யானைக்கு) உதவும்படி |
| புள் ஊர்ந்து |
– |
பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று |
| உறுதுயர் |
– |
(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை |
| தீர்த்த |
– |
போக்கின |
| அதகன் |
– |
(ஆச்ரிதாக்ஷணத்தில்) மிடுக்கையுடையவன் |
|
வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – பதகம் – ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; ??? என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற) பாபத்தையுடையவனென்று பொருளாம். உறுதுயர் – ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று. உறு – மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல். களிறு – யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் – பிடி). களி – மதக்களிப்பு; அதனையுடையது – களிறு எனக் காரணக்குறி; று – பெயர்விகுதி; ஒன்றன்பால் விகுதியெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால். அதன் – ஹதகன்; ஆச்ரிதவிரோதியை ஹதம்பண்ணுமவன்.
English Translation
The elephant caught in the jaws of the vicious crocodile bellowed folded hands and cried, “Krishna, O My Krishna, Help!” My Lord and master drove his bird Garuda thither and saved him from distress. He comes and shows ‘Fear!’ to me, O My, O My!
