(125)
கொங்கைவன் கூனிசொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பதவுரை
| கொங்கை |
– |
(முதுகில்) முலையெழும்பினாற் போன்ற |
| வல் |
– |
பலிஷ்டமான |
| கூனி |
– |
கூனையுடையளான மந்தரையினுடைய |
| சொல் |
– |
சொல்லை |
| கொண்டு |
– |
அங்கீகரித்து |
| எங்கும் |
– |
எல்லாவிடங்களிலுமுள்ள |
| குவலயம் துங்கம் |
– |
இப்பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான |
| கரியும் |
– |
யானைகளையும் |
| பரியும் |
– |
(அங்ஙனொத்த) குதிரைகளையும் |
| இராச்சியமும் |
– |
ராஜ்யத்தையும் |
| பரதற்கு |
– |
பரதாழ்வானுக்கு |
| அருளி |
– |
கொடுத்துவிடல் |
| வல்கான் அடை |
– |
கொடியகாட்டை அடைந்த |
| அம் கண்ணன் |
– |
அழகிய கண்ணையுடையனான இவன் |
|
அப்பூச்சி காட்டுகின்றான் *** |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – ஒற்றுமைநயத்தால் ராமக்ருஷ்ணரிருவரையும் ஒருவராகவே கொண்டு ஆழ்வார் இங்ஙனருளிச் செய்கின்றனரென்க. கொங்கை – கூனுக்கு அடைமொழி; வல் – கூனிக்கு அடைமொழி. பெருமாளுடைய வந: ரைக்கு மூலகாரணம் கூனியானமை பற்றிக் ‘கூனி சொற்கொண்டு’ என்றார். குவலயத்துங்கக்கரி – வடசொற்றொடர். இராச்சியம் – ??? வட சொல் திரிபு. (அங்கண்ணன்) கண் – தயையாகவுமாம்; பட்டாபிஷேகத்துக்காகக் கட்டின காப்போடே காட்டுக்குப்போகச் சொன்னபோதும் முகங்கருகாமல் மலர்ந்து முடிதவிர்ந்து சடை புனைந்து நாட்டைவிட்டுக் காட்டுக்குப்போன பெருமாளுடைய மஹாகுணத்தை வியந்து அவனது தயையை அழகியதாகக் கொண்டாடுகிறபடி.
English Translation
Listening to the hard-hearted kuni’s words, the Lord of beautiful eyes went into the forest granting his prized elephants, steeds, kingdom and all else to Bharata. He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!
