(125)

(125)

கொங்கைவன் கூனிசொற் கொண்டு

குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற் கருளிவன் கானடை

அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

கொங்கை

(முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்

பலிஷ்டமான
கூனி

கூனையுடையளான மந்தரையினுடைய
சொல்

சொல்லை
கொண்டு

அங்கீகரித்து
எங்கும்

எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்

இப்பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்

யானைகளையும்
பரியும்

(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்

ராஜ்யத்தையும்
பரதற்கு

பரதாழ்வானுக்கு
அருளி

கொடுத்துவிடல்
வல்கான் அடை

கொடியகாட்டை அடைந்த
அம் கண்ணன்

அழகிய கண்ணையுடையனான இவன்

அப்பூச்சி காட்டுகின்றான் ***

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஒற்றுமைநயத்தால் ராமக்ருஷ்ணரிருவரையும் ஒருவராகவே கொண்டு ஆழ்வார் இங்ஙனருளிச் செய்கின்றனரென்க.  கொங்கை – கூனுக்கு அடைமொழி; வல் – கூனிக்கு அடைமொழி.  பெருமாளுடைய வந: ரைக்கு  மூலகாரணம் கூனியானமை பற்றிக் ‘கூனி சொற்கொண்டு’ என்றார்.  குவலயத்துங்கக்கரி – வடசொற்றொடர்.  இராச்சியம் – ???  வட சொல் திரிபு.  (அங்கண்ணன்) கண் – தயையாகவுமாம்; பட்டாபிஷேகத்துக்காகக் கட்டின காப்போடே காட்டுக்குப்போகச் சொன்னபோதும் முகங்கருகாமல் மலர்ந்து முடிதவிர்ந்து சடை புனைந்து நாட்டைவிட்டுக் காட்டுக்குப்போன பெருமாளுடைய மஹாகுணத்தை வியந்து அவனது தயையை அழகியதாகக் கொண்டாடுகிறபடி.

English Translation

Listening to the hard-hearted kuni’s words, the Lord of beautiful eyes went into the forest granting his prized elephants, steeds, kingdom and all else to Bharata.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top