(120)
காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பதவுரை
| காயும் |
– |
(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற |
| நீர் |
– |
மடுவின் ஜலத்திலே |
| புக்கு |
– |
புகுந்து (கலக்கி) |
|
(அமமடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து) |
||
| கடம்பு ஏறி |
– |
(அம்மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி |
| காளியன் |
– |
அந்தக் காளியனுடைய |
| தீய பணத்தில் |
– |
கொடிய படத்திலே |
| சிலம்பு ஆர்க்க |
– |
(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி |
| பாய்ந்து |
– |
குதித்து |
| ஆடி |
– |
கூத்தாடி |
|
(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) |
||
| வேயின் குழல் ஊதி |
– |
மூங்கினாலானாகிய குழலை ஊதி |
| (இப்படி) |
– |
|
| வித்தகன் ஆய் நன்ற |
– |
விஸ்மயரீயனாயிருந்த |
| ஆயன் |
– |
கண்ணபிரான் |
|
வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – தீயபணம் = படம். விஷமிருத்தற்கு உரிய இடமாதலாலும் கோபத்தைத் தெரிவித்தலாலும்.
English Translation
The cowherd-lad entered the hot waters, climbed on to a Kadamba tree, leapt over the hoods of the venomous snake Kaliya, and danced as his anklets jingled merrily; playing his bamboo flute he stood like a wonder. He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!
