(120)

(120)

காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன்

தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி

வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற

ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

காயும்

(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்

மடுவின் ஜலத்திலே
புக்கு

புகுந்து (கலக்கி)

(அமமடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)

கடம்பு ஏறி

(அம்மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்

அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்

கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க

(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து

குதித்து
ஆடி

கூத்தாடி

(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)

வேயின் குழல் ஊதி

மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)

வித்தகன் ஆய் நன்ற

விஸ்மயரீயனாயிருந்த
ஆயன்

கண்ணபிரான்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தீயபணம் = படம்.  விஷமிருத்தற்கு உரிய இடமாதலாலும் கோபத்தைத் தெரிவித்தலாலும்.

English Translation

The cowherd-lad entered the hot waters, climbed on to a Kadamba tree, leapt over the hoods of the venomous snake Kaliya, and danced as his anklets jingled merrily; playing his bamboo flute he stood like a wonder.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top