(119)

(119)

மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்

சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண்

அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

மலைபுரை

மலையை ஒத்த
தோள்

தோள்களையுடைய
மன்னவர்

அரசர்களான
மாரதரும்

மஹாரதரும்
மற்றும் பலர்  உம்

மற்றும் பலவகை அரசர்களும்
குலைய

அழியவும்
நூற்றுவரும்

(துர்யோதநாதிகள்) நூறுபேரும்
பட்டு

மரணமடைந்து
அழிய

உருவமழிந்து போகவும்
பார்த்தன்

அர்ஜுனனுடைய
சிலை

(காண்டீவமென்னும்) வில்
வளைய

வளையவும்
திண் தேர் மேல்

(அந்த  அர்ஜுனனுடைய) வலிய தேரின்மேல்
முன் நன்ற

(ஸாரதியாய்) முன்புறத்தில் நன்ற
செம் கண்

(வாத்ஸல்யஸூசகமாகச்) சிவந்த கண்களையுடையனாய்
அலவலை

(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பருத்த வடிவத்திலும் ஒருவராலும் சலிப்பிக்க முடியாதபடி உறுதியாயிருத்தலிலும் தோளுக்கு மலை உவமை யென்க.  தேர்வீரர் – அதிரதர் மஹாரதர் ஸமரதர் அர்த்தாதர் என நால்வகைப்படுவராதலால் ‘மாரதரும் மற்றும்’ என்றார்.  (அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின்மேலிருந்து தமது ரதகஜதுரகபதாதிகளுக் கழிவுவாராமல் காத்துக்கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் – அதிரதம் என்றும கீழ்ச் சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் – மஹாரதர் என்றும் ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்க வல்லவர் – ஸமரதர் என்றும் அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் – அர்த்தரதர் என்றுஞ் சொல்லப்படுபவர். ) ‘மன்னவரும்’ என்ற விடத்திலுள்ள உம்மை ‘பலர்’ என்பதோடு கூட்டப்பட்டது.  மாரதர்  – ??? என்ற வடசொல் திரிபு.  பார்த்தன் – வடசொல்; ‘???’ (குந்தி) என்பவளுடைய மகன்.  அலவலை – அர்த்தத்தின் உயர்த்தியையும் கேட்பவனுடைய தாழ்வையும் பாராமல் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லுமவன்; வரம்பு கடந்து பேசுபவன்.  இப்படியெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் செய்தது – த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிக்கும் பொருட்டாம்.

English Translation

The lotus-eyed Lord drove the chariot for Arjuna who wielded the bow and killed Duryodhana and his hundred brothers; kings with mountain-like arms, the great seer Bhishma, and a host of others trembled.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top