(119)
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பதவுரை
| மலைபுரை |
– |
மலையை ஒத்த |
| தோள் |
– |
தோள்களையுடைய |
| மன்னவர் |
– |
அரசர்களான |
| மாரதரும் |
– |
மஹாரதரும் |
| மற்றும் பலர் உம் |
– |
மற்றும் பலவகை அரசர்களும் |
| குலைய |
– |
அழியவும் |
| நூற்றுவரும் |
– |
(துர்யோதநாதிகள்) நூறுபேரும் |
| பட்டு |
– |
மரணமடைந்து |
| அழிய |
– |
உருவமழிந்து போகவும் |
| பார்த்தன் |
– |
அர்ஜுனனுடைய |
| சிலை |
– |
(காண்டீவமென்னும்) வில் |
| வளைய |
– |
வளையவும் |
| திண் தேர் மேல் |
– |
(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின்மேல் |
| முன் நன்ற |
– |
(ஸாரதியாய்) முன்புறத்தில் நன்ற |
| செம் கண் |
– |
(வாத்ஸல்யஸூசகமாகச்) சிவந்த கண்களையுடையனாய் |
| அலவலை |
– |
(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன் |
|
வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – பருத்த வடிவத்திலும் ஒருவராலும் சலிப்பிக்க முடியாதபடி உறுதியாயிருத்தலிலும் தோளுக்கு மலை உவமை யென்க. தேர்வீரர் – அதிரதர் மஹாரதர் ஸமரதர் அர்த்தாதர் என நால்வகைப்படுவராதலால் ‘மாரதரும் மற்றும்’ என்றார். (அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின்மேலிருந்து தமது ரதகஜதுரகபதாதிகளுக் கழிவுவாராமல் காத்துக்கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் – அதிரதம் என்றும கீழ்ச் சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் – மஹாரதர் என்றும் ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்க வல்லவர் – ஸமரதர் என்றும் அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் – அர்த்தரதர் என்றுஞ் சொல்லப்படுபவர். ) ‘மன்னவரும்’ என்ற விடத்திலுள்ள உம்மை ‘பலர்’ என்பதோடு கூட்டப்பட்டது. மாரதர் – ??? என்ற வடசொல் திரிபு. பார்த்தன் – வடசொல்; ‘???’ (குந்தி) என்பவளுடைய மகன். அலவலை – அர்த்தத்தின் உயர்த்தியையும் கேட்பவனுடைய தாழ்வையும் பாராமல் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லுமவன்; வரம்பு கடந்து பேசுபவன். இப்படியெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் செய்தது – த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிக்கும் பொருட்டாம்.
English Translation
The lotus-eyed Lord drove the chariot for Arjuna who wielded the bow and killed Duryodhana and his hundred brothers; kings with mountain-like arms, the great seer Bhishma, and a host of others trembled. He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!
