(112)

(112)

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு

மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

பண்டு

முன்னொருகாலத்திலே
வெண்கலம்  பத்திரம்

வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி

(அரையிற்) கட்டிக்கொண்டு
விளையாடி

விளையாடி
பல கண் செய்த

பல பீலிக்கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை

பெரிய குடையாகிற
காலின் கீழ்

சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி

(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப்  பாடிக்கொண்டு
பல்லாண்டு இசைப்ப

மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்

பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்

புறம்புல்குவான்-;

வாமனன் என்னை புறம்புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

பத்திரம் – வடசொல்; இலை என்பது பொருள்; வெண்கலத்தாலே இலைவடிவமாகச் செய்து குழந்தையினரையிற் கட்டுதல் முற்காலத்தில் ப்ராஹ்மணர்களின் வழக்கம்போலும்.  அங்ஙனமே வாமநாவதாரம் செய்த ஸ்ரீவிஷ்ணுவின் தன் திருவரையிலணிந்து கொண்டனனென்க; இனி முதலடியால் கண்ணபிரானது பால்யதசையில் லீலைவகையைச் சொல்லிற்றாகவுமாம்.  “கண்பலபெய்து” என்று பாடமாகில் கருந்தழை – பீலிப்பிச்சத்தினுடைய பல கண் – பல கண்களையும் பெய்து  – தலையில் அணிந்துகொண்டு காலின் கீழ் விளையாடி – சோலைநிழலிலே விளையாடியென்று உரைக்க வேண்டும்.  பீலித்தழையைத் தலையிலே கட்டுகை ஜாதிக்கு உரிய செய்கையாம்.  மண் என்ற சொல் ஆகுபெயரால் பூமியைக் காட்டும்; அச்சொல் இங்கு உலகம் என்ற பொதுப்பொருளைத் தந்தது.

English Translation

The little Lord who plays and stands under the shade of trees, with a tuft of peacock feathers on his head and a silver fig leaf on his waist, praised with songs in many modes, came as Vamana then and took the Earth.  He will embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top