(1530)

(1530)

சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்

திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்

வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு

அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே.

 

பதவுரை

சுளைகொண்ட

பல சுளைகளை யுடைத்தான

பலங் கனிகள்

பலாப் பழங்களில் நின்றும்

தேன் பாய

தேன் பெருகப்பெற்றும்,

கதலிகளின்

வாழைமரங்களின்

திளைகொண்ட

பருத்திருந்துள்ள

பழம்

பழங்கள்

கெழுமு

நெருங்கப்பெற்று மிருக்கிற

திகழ் சோலை

விளங்குகின்ற சோலைகளையுடைய

திருநறையூர்

திருநறையூரில்,-

வளை கொண்ட வண்ணத்தன்

சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய

பின் தோன்றல்

தம்பியாயும்

மூ உலகோடு

மூன்று லோகங்களையும்

அளைவெண்ணெய்

தயிர் வெண்ணெயையும்

உண்டான் தன்

அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய

அடி இணையே நெஞ்சே! அடை -.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வளைகொண்ட வண்ணத்தன் பன்தோன்றல் பலராமனுடைய திருமேனிநிறம் வெளுப்பாதலால் ‘வளைகொண்ட வண்ணத்தன்’ என்று பலராமனைச்சொன்னபடி.  “முன்னலோர் வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோடப், பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலுங் காண்க.

 

English Translation

O Heart!  The slivers of jackfruit drip with honey on trees, while bananas slip out of their peels on fight bunches in plantations of Tirunaraiyur; the Lord who appeared as a younger brother of the conch-hued Balarama took the mil products and the world in one gulp. Attain his feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top