(1536)

(1536)

மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து,எங்கும்

நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்

பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த

இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே.

 

பதவுரை

மறை ஆரும்

வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட

பெரு வேள்வி

பெரிய யஜ்ஞங்களிலுண்டான

கொழும்புகை

நல்ல புகையானது

வளர்ந்து போய்

மேலே கிளம்பிப்போய்

எங்கும் நிறை ஆர வான்மூடும்

எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற

நீள் செல்வத் திருநறையூர்-;

பிறை ஆரும் சடையானும்

சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும்

பிரமனும்

நான்முகனும்

முன்

முன்னேநின்று

தொழுது ஏத்த

வணங்கித்துதிக்கும்படி

இறை ஆகி நின்றான் தன்

ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய

இணை அடியே நெஞ்சே அடை-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யஜ்ஞயாகங்களை யநுஷ்டிக்கும் வைதிக ப்ராஹ்மணர்கள் வாழ்கிற விடம் திருநறையூர் என்பது முன்னடிகளின் கருத்து; “மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகை போய்த் திடவிசும்பிலமரர் நாட்டை மறைக்குந்தண் திருப்புலியூர்”  (8-9-8) என்ற திருவாய்மொழியை அடியொற்றி யருளிச்செய்கிறபடி.  ஹோமரக்நிகளிற் கிளர்ந்த தூமம் ஆகாசமெங்கும் பரவி மறைந்திருக்கப்பெற்ற.  திருநறையூரில் பிரமன் சிவன் முதலான தெய்வங்கள் பணிந்து போற்ற ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கு மெம்பிரானுடைய இணையடியே அடை நெஞ்சே!

 

English Translation

O Heart!  The smoke from the fire altar of the Vedic seers climbs up and fills the sky with wealth-laden clouds in Tirunaraiyur.  The Lord stands above all, worshipped by Siva and Brahma, Attain his feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top