(1525)
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
மண்ணின் மீ பாரம் |
– |
பூமியின் மீது உண்டான சுமைகளை |
|
கெடுப்பான் |
– |
தொலைப்பதற்காகவும் |
|
மறம் மன்னர் |
– |
மாற்றரசர்களது |
|
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் |
– |
ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும் |
|
விண்ணின் மீது ஏற ஸ்ரீ |
– |
வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும் |
|
பாரத்ந்து |
– |
பாரதப்போரில் |
|
விசயன் தேர் ஊர்ந்தானை |
– |
அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை |
|
நான் நண்ணிநாடி |
– |
நான் ஆசைப்பட்டுத்தேடி |
|
நறையூரில், கண்டேன்-. |
||
English Translation
The Lord who drove the chariot for Vijayan and despatched the tyrant kings to heaven, and thus relieved the Earth of its burden, resides in Naraiyur, I have seen him today.
