(1526)
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
பொங்கு ஏறு |
– |
மேன்மேலும் அதிசயித்து வருகிற |
|
நீள் சோதி |
– |
அளவற்ற தேஜஸ்ஸையுடைய |
|
பொன் ஆழி தன்னோடும் |
– |
அழகிய திருவாழி யாழ்வானும் |
|
சங்கு ஏறு கோலம் தட |
– |
ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய |
|
கை |
– |
திருக்கைகளையுடைய |
|
பெருமானை |
– |
பெருமை பொருந்தியவனும் |
|
கொங்குஏறு சோலை |
– |
தேன் மிகுந்திருக்கிற பொழில்களையுடைய |
|
குடந்தை |
– |
திருக்குடந்தையில் |
|
கிடந்தானை |
– |
பள்ளிகொண்டிருப்பவனுமான |
|
நம் கோனை |
– |
நம்பெருமானை |
|
நாடி, நறையூரில் கண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் மிக்கு வளராநின்ற எல்லையில்லாத தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானோடுகூட ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானுக்கும் குடியிருப்பான அழகிய திருக்கைகளை யுடையனாய்த் திருக்குடந்தையிற் கண்வளர்ந்தருள்பவனான எம்பெருமானைத் திருநறையூரிலே காணப்பெற்றேன்.
English Translation
The Lord who reclines in fragrant kudanadai wields a beautiful white conch and a radiant discus. He is our king. I have seen him in Naraiyur.
