பெரிய திருவந்தாதி திருமொழி – 5

(2625)

வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்

வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்

பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,

பன்னாளும் நிற்குமிப் பார்.

விளக்க உரை

(2626)

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்

பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்

ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு

ஆவான் பூகாவால் அவை.

விளக்க உரை

(2627)

அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,

நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்

மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,

மனத்துயரை மாய்க்கும் வகை.

விளக்க உரை

(2628)

வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,

மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து

மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,

மேலைத்தாம் செய்யும் வினை.

விளக்க உரை

(2629)

வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,

தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது

வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,

நாயகத்தான் பொன்னடிகள் நான்.

விளக்க உரை

(2630)

நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்

தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத

மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,

நீகதியா நெஞ்சே! நினை.

விளக்க உரை

(2631)

நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,

நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச

எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்

எவ்வளவு முண்டோ எமக்கு.

விளக்க உரை

(2632)

எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,

அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த

மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,

கொன்றானை யேமனத்துக் கொண்டு.

விளக்க உரை

(2633)

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்

வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்

காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்

பேருருவென் றெம்மைப் பிரிந்து.

விளக்க உரை

(2634)

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,

திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்

ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,

மாவை பிளந்தார் மனம்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top