நான்முகன் திருவந்தாதி திருமொழி – 9

(2462)

கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்

வினையாவி தீர்ந்தேன், – விதையாக நற்றமிழை

வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,

கற்றமொழி யாகிக் கலந்து.

விளக்க உரை

(2463)

கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை

நலந்தானு மீதொப்ப துண்டே – அலர்ந்தலர்கள்

இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்

விட்டேத்த மாட்டாத வேந்து.

விளக்க உரை

(2464)

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்

மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், – சார்ந்தவர்க்குத்

தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,

பின்னால்தான் செய்யும் பிதிர்.

விளக்க உரை

(2465)

பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,

எதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்

கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்

தொழக்காதல் பூண்டேன் தொழில்.

விளக்க உரை

(2466)

தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,

பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த

வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,

வில்லாளன் நெஞ்சத் துளன்.

விளக்க உரை

(2467)

உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்

உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்

தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,

என்னொப்பார்க் கீச னிமை.

விளக்க உரை

(2468)

இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,

சமய விருந்துண்டார் காப்பார் – சமயங்கள்

கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு

உண்டா னுலகோ டுயிர்.

விளக்க உரை

(2469)

உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,

அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, – செயல்தீரச்

சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்

பந்தனையார் வாழ்வேல் பழுது.

விளக்க உரை

(2470)

பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,

வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை,

கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து

விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு,

விளக்க உரை

(2471)

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்

பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த

வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே

தாழா யிருப்பார் தமர்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top