(2467)
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.
பதவுரை
|
நல் நெஞ்சை |
– |
எனக்குப் பாங்கான மனமே! |
|
உத்தமன் |
– |
புருஷோத்தமனான எம்பெருமான் |
|
உளன் கண்டாய் |
– |
(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண் |
|
தன் ஒப்பான் |
– |
(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான் |
|
தமியேற்கு |
– |
ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும் |
|
என்றும் உளன் கண்டாய் |
– |
எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க. |
|
உள்ளுவார் உள்ளத்து |
– |
ஆஸ்திகர்களுடைய மனத்திலே |
|
உளன் கண்டாய் |
– |
நித்யவாஸம் பண்ணுமவன் காண் |
|
என் ஒப்பார்க்கு |
– |
என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும் |
|
தான் ஈசன் ஆய் உளன் காண் |
– |
தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண் |
|
இமை |
– |
இதனை அறி. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார் தம்முடைய ஆஸ்திகத்வத்தின் உறைப்பை நன்கு வெளியிடும் பாசுரம் இது.
தன் ஒப்பான் – ‘***‘ என்ற கருதியின்படி ஒத்தாரும் மிக்காருமிலனாதலால் தனக்குத்தானே ஒப்பாமவன். இங்ஙனங் கூறுதலே அநந்வயாலங்காரமென்பர். தமியேற்கு – தமியன் என்றால் தனிப்பட்டவன் என்று பொருள். அகிஞ்சநனான எனக்கு என்கை. ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்‘ என்கிறபடியே ஒரு கைம்முதலுமில்லாதவர்க்கு எல்லாக் கைம்முதலும் எம்பெருமான்தானேயா யிருப்பனென்க. என்னொப்பார்க்கு – மற்றுள்ள ஆழ்வார்களையுங் கூட்டிக்கொள்ளுகிறபடி.
English Translation
See, O Heart! The supreme Lord exists. Always he exists. In the hearts of devotees, he exists, The Lord without a peer appears before devotees like me on his own know it.
