திருவிருத்தம் திருமொழி – 7

(2538)

வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்

நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்

வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்

தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.

விளக்க உரை

(2539)

இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,

அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன்

நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்

முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே.

விளக்க உரை

(2540)

வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,

தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ

கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்

கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே

விளக்க உரை

(2541)

இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த

திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா

ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்

கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.

விளக்க உரை

(2542)

கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம்

உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம்

முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்

உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.

விளக்க உரை

(2543)

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்

எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்

மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்

கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே.

விளக்க உரை

(2544)

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று

ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற

மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்

தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.

விளக்க உரை

(2545)

மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்

புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்

நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்

கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.

விளக்க உரை

(2546)

காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்

போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம்

நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?

வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே

விளக்க உரை

(2547)

வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்

தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை

விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை

உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top