(2547)

(2547)

வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்

தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை

விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை

உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.

பதவுரை

வளை  வாய் திரு சக்கரத்து

வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்

எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்

திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்

கட்டுவாய்ந்த
நறு

பரிமளமுள்ள
கண்ணி

மாலைவடிவமான
தண் அம்

குளிர்ந்து அழகிய
துழாய்க்கு

திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்

(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து

அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க

நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து

எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்

இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே

ஆயிரம் கற்பமாகா நின்றது.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பொழுதின் நெடுமைக்குத் தலைவி இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனைப் பிரிந்து அந்த விரஹஸ்யஸநத்தை ஆற்றாமல் பகலிற் காட்டிலும் இரவில் மிக வருந்தி அரிதிற் சில நாட்களைக் கழித்த நாயகி அவ்வருத்தம் நாளுக்குநாள் அதிகப்படுதலால் இரவும் ஒரு, நாளைக்கொருநாள் மிக நெடுகுவதாகத் தோன்றுதல் பற்றி ‘இதுக்கு முன்பு எனது நிறத்தை’ மாறுபடுத்தும் பொருட்டு ஒரு நாளாயும் ஒரு மாதமாயும் ஒரு வருடமாயும் ஒரு கற்பகமாகவும் படிப்படியாக வளர்ந்து தோன்றி வருந்தி வந்த இருள் இன்றைக்கு என்னை அடியோடு முடிக்கும் பொருட்டு மிகப் பல கற்பகங்களாகத் தோன்றி வருத்துகின்றது’ என்று ஒருநாளிரவிற் கூறியதா மிது.

வளைவாய்த் திருச்சக்கரத்து = சங்கையும் கூர்மையான சக்கரத்தையுமுடைய என்று முரைக்கலாம்.

இதற்கு ஸ்வாபதேசார்ந்தமாவது: – எம்பெருமானைச் சேரப்பெறாத நிலையில் தாமதம் பொறுக்கமாட்டாமையால் காலம் நீட்டித்ததாகத் தோன்ற வருந்துகிற ஆழ்வார் வார்த்தையென்க. ஸர்வேச்வரத்வத்துக்கு அறிகுறியான திருவாழியையும்  ஜீவாதமாக்களை அடிமையாகக் கொள்ளுதற்கு உரிய ஸமயத்தையும் உபய விபூதியையும் அலங்காரத்தையுமுடைய எம்பெருமானது போக்யதையை அநுபவிக்கப் பெறாமையாலே தன்மை குலையும்படி எம்மை வருந்துவதாகக் காலம் வரையறை யில்லாமல் வளர்கிறதென்று தளர்ந்து அருளிச்செய்தவாறு.

English Translation

Since the time I desired the Tulasi on the crown of our lord who bears the sharp-edged discus, the ruthless day has been casting the yellow hue of paleness on me relentlessly, for months, years and aeons.  Above it, this terrible night who entered to wipe me out, extends into a thousands aeons, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top