பெரிய திருவந்தாதி திருமொழி – 3

(2605)

சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,

இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்

பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,

காருருவன் தான்நிமிர்த்த கால்.

விளக்க உரை

(2606)

காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,

மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்

தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,

வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.

விளக்க உரை

(2607)

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,

இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,

நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,

தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

விளக்க உரை

(2608)

தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்

தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே

இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,

அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.

விளக்க உரை

(2609)

ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை

ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்

மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்

இனத்தலைவன் கண்ணனால் யான்.

விளக்க உரை

(2610)

யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்

கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்

இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,

அருளென்னும் தண்டால் அடித்து.

விளக்க உரை

(2611)

அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்

முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.

செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,

அறிகிலாமால் நீயளந்த அன்று.

விளக்க உரை

(2612)

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,

இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்

கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்

உட்கண்ணால் காணு முணர்ந்து.

விளக்க உரை

(2613)

உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,

இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்

தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,

எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.

விளக்க உரை

(2614)

இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய

செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே

மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்

டடியெடுப்ப தன்றோ அழகு?

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top