2 – 2 திண்ணன்

இரண்டாந் திருமொழி

(3020)

திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,

எண்ணின்மீதிய னெம்பெருமான்,

மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,

நங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.

விளக்க உரை

(3021)

ஏபாவம்,பரமே, யேழுலகும்,

ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,

மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,

கோபாலகோளரி யேறன்றியே.

விளக்க உரை

(3022)

ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,

வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,

மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,

மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.

விளக்க உரை

(3023)

தேவுமெப் பொருளும்படைக்க,

பூவில்நான் முகனைப்படைத்த,

தேவனெம் பெருமானுக்கல்லால்,

பூவும்பூசனையும் தகுமே.

விளக்க உரை

(3024)

தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,

மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,

தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,

மிகும்சோதி மேலறிவார்யவரே.

விளக்க உரை

(3025)

யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,

கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,

பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,

அவரெம் ஆழியம் பள்ளியாரே.

விளக்க உரை

(3026)

பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,

வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,

உள்ளுளா ரறிவார் அவன்றன்,

கள்ளமாய மனக்கருத்தே.

விளக்க உரை

(3027)

கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,

வருத்தித்தமர்யப் பிரானையன்றி,

ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்

தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.

விளக்க உரை

(3028)

காக்குமியல்வினன் கண்ணபெருமான்,

சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,

வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,

ஆக்கினான் தெய்வவுலகுகளே.

விளக்க உரை

(3029)

கள்வா எம்மையு மேழுலகும்,

நின் னுள்ளேதோற்றிய இறைவா என்று,

வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,

புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே.

விளக்க உரை

(3030)

ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்

கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,

வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,

ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top