(3868)

(3868)

வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை

திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்

பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்

மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.

 

பதவுரை

வண்ணம் மணி மாடம்

அழகிய மணி மாடங்களை யுடைத்தான

நல் நாவாய் உள்ளானை

விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து

திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்

திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய்

பண் ஆர் தமிழ்

பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து

இப்பத்தும் வல்லார்

இப்பத்தையும் ஒதவல்லவர்கள்

மண் ஆண்டு

இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு

மல்லிகை மணம் கமழ்வர்

“ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று.  மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்; மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே  ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம்  *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர்  * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது.   “மல்லிகை மணங்கமழ்வர்” என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் “மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்” என்றுரைத்தார்.  அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.

 

English Translation

This decad of the thousand Pann-based songs, by walled kurugur’s Satakopan on the lord Tirunavai residing amid painted mansions, -those who master it will rule Earth and exude the fragrance of Jasmine

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top