(3369)

(3369)

வலையுள் அகப்பட்டுத் தென்னைநன் நெஞ்சம் கூவிக்கொண்டு,

அலைகடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான்தன்னை

கலைகொள் அகலல்குல் தோழீ. நம்கண்க ளால்கண்டு

தலையில் வணங்க மாங்கொலோ தையலார் முன்பே?

 

பதவுரை

கலைகொள்

சேலை யணிந்ததும்

அகல்

அகன்றதுமான

அல்குல்

நிதம்பத்தையுடைய

தோழீ

தோழியே,

என்னை

என்னை

வலையுள்

(தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே

அகப்படுத்து

சிக்கிக்கொள்ளும்படி செய்து

நல் நெஞ்சம்

(எனது) நல்ல நெஞ்சையும்

கூவிக்கொண்டு

அடியறுத்து அழைத்துக்கொண்டு

அலைகடல் பள்ளி அம்மானை

அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.

ஆழி பிரான் தன்னை

திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை

நம் கண்களால் கண்டு

நமது கண்களாலே பார்த்து

தையலார் முன்பே

(பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்

தலையில்

தலையாலே

வணங்கவும் ஆம் கொலோ

வணங்கவும் கூடுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வலையுளகப்படுத்து.) எம்பெருமான் பக்கலில் குண ஹாஜி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப்பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள். என்னைத் தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற வலையில் அகப்படுத்திக்கொண்டு *காற்றிற் கடியனாயோடித் திருப்பாற்கடலிலே புக்கொளித்த பெருமானைத் தோழீ! அவனுக்கு குணஹாகி சொல்லுகிற இந்தப் பெண்டுகள் கண்ணெதிரே நம் கண்ககளால் கண்டு தலையாலே வணங்கப்பெறுவோமே என்றாளாயிற்று.

“தலையில் வணங்கவுமாங்கோலோ” என்றவிடத்து ஈட்டில் சுவைமிக்க ஓர் ஐதிஹ்யமுள்ளது. ராஜேந்த்ரசோழன் என்கிறவிடத்தில் கூரத்தாழ்வான் இப்பாசுரத்தை உபந்யஸித்தருளாநிற்கையில் ஆமருவிநிரை மேய்த்தான் நம்பியாரென்று நூறு பிராயம் போந்திருப்பாரொரு பெரியவர் நடுங்க நடுங்க எழுந்திருந்து நின்று “ஸ்வாமி! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வான் ‘இதில் என்ன  ஸந்தேஹம்? சிஷ்டாசாரமுண்டு காணும்; ஸ்ரீநாகராஜன் திருமகள் அநுஷ்டித்தான்காணும்’ என்று சொல்லி ***•••••••••••••••••••••••••• =கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவேயம் மகஸ்விநீ, தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச திரஸா சாபிவாத* என்கிற (ஸுதையின் வாக்காகிய) ஸ்ரீராமாயணச்லோகத்தையெடுத்து விரியவுயந்யஸித்தருளினாராம்.

பிராட்டி பெருமாளைத் தான் தலையாலே வணங்கினதாகச் சொல்லும்படி திருவடியிடத்துக் கூறியிருக்கின்றாள். இங்கே ஒரு ரஹஸ்யார்த்தம் பெரியார் அருளிச்செய்வதுண்டு பெருமாள் நாட்டுக்குப் புறப்படும்போது பாதுகையும் கூடவந்தது, பிராட்டியும் கூடவந்தாள். பாதுகை பெருமாளைப் பிரிந்து வடக்கே சென்றது; பிராட்டி அதற்குப் பிறகு பெருமாளைப் பிரிந்து தெற்கே செல்ல நேர்ந்தது. பெருமாளை விட்டுப்பிரிந்ததென்னுமிடம் பாதுகைக்கும் பிராட்டிக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், பாதுகை ரஜ்யாபிஷேகம் பெற்று மிகுந்த செல்வச் சிறப்பை அநுபவியா நின்றது; பிராட்டி எழுநூறு ராக்ஷஸிகளினிடையே கிடந்து பலவகை வருத்தங்களும் பட நேர்ந்தது. இதைப் பிராட்டி ஆலோசித்துப் பார்த்தாள். “பாதுகை பரமானந்தத்திலிருக்கவும் நாம் பெரிய ஆபத்தில் விழுந்து கிடக்கவும் என்ன காரணம்?” என்று ஆராய்ந்து பார்த்தாள்; பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெற்ற பாக்கியம் பாதுகைக்கு இருந்ததனாலே அது சிறப்புப் பெற்றது; நாம் பத்தினியான முறைமையாலே *** வாணிநா பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா* என்கிற தந்தை கட்டளையின்படி கையைப் பிடிக்க நேர்ந்ததனாலே பாதுகைக்குண்டான சிறப்பு நமக்கு வாய்க்கவில்லை; இதுவரையில் பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெறாத குறை தீர இன்று ஆசார்யமுகேந அதனைப் பெற்றிடுவோம் என்று கருதியே *சிரஸ: சாபிவாத* என்று சொல்லியனுப்பினானென்று.

இவ்வர்த்தம் காட்டிலும் “இதுதான் ப்ரணய ரோஷம் தலையெடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ? அயேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ?” என்று தொடங்கியுள்ள ஸ்ரீஸூக்திகளிலும் உறைந்திருக்கும்.

 

English Translation

The Lord who caught me in his dragnet and called my good heart unto him, reclines in the deep ocean with a discus in hand.  O Sister, with broad jewelled hips! Will we ever see him with our eyes, and worship him in the presence of these fair ladies?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top