(3306)

(3306)

சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,

பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,

மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்

தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.

 

பதவுரை

சக்கரத்து அண்ணலே என்று

கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி

தாழ்ந்து

அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து

கண்நீர் ததும்ப

கண்ணீர்மல்க

பக்கம் நோக்கி நின்று

சுற்றும் பார்த்து நின்று

அலந்தேன்

தளர்ந்தவனான

பாவியேன்

பாவியானநான்

காண்கின்றிலேன்

காணப்பெறுகின்றிலேன்:

(காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ)

மிக்க ஞானம் மூர்த்தி ஆய

மிகுந்த ஞானஸ்வரூபனாய்

வேதம் விளக்கினை

வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை

என் தக்க

எனக்கேற்ற

ஞானம் கண்களாலே

ஞானமாகிற கண்ணாலே

கண்டு தழுவுவனே

கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே!

(எப்படி மறக்கமுடியும்?)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸஜ்ஞானத்திற்கு விஷயமாகிக்கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.

கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திக் கொண்டவனே! என்று சொல்லித்தரைப்பட்டுக் கண்களில் நீர் பெருகப்பெற்றேன்; எந்தப் பக்கமாக வருகின்றானோ

வென்று பக்கந்தோறும் நோக்கினேன்; மஹாபாபியாகையாலே காணப்பெற்றிலேன்.  காணாவிட்டால் மறந்து பிழைக்கலாமே; நெஞ்சில் பிரகாசியாமலிருந்தாலன்றோ மறக்கலாம்; பரிபூர்ணமான ஞானத்தையே வடிவாகவுடையனாய் வேதவேத்யனாயிருக்கிற அப்பெருமானை மறவாமலிருப்பதற்குறுப்பாக எனக்குத்தகுந்தாப்போலே ஒரு ஜ்ஞான த்ருஷ்டியுண்டாகி அத்தாலே கண்டுதழுவும்படியாயேயுள்ளது; மறக்கவும் வழியில்லைஇ தரிக்கவும் வழியில்லை என்றாராயிற்று.

ஆழ்வார்க்கு ப்ரேமம் ஞானம் என்று இரண்டுண்டு; கண்ணாரக்காணப் பெறாமையாலே ப்ரேமம் க்லேச ஹேதுவாயிற்று; மறந்து பிழைக்கவும் முடியாமையாலே ஞானமும் க்லேச

ஹேதுவாயிற்று என்று தளருகிறபடி.

கண்டுதழுவுவனே என்னுமிடம் களித்துக்கூறுவதுபோலத் தோற்றினாலும் பிரகரணத் திற்குச் சேரவேண்டுகையாலே  க்லேசோக்தியாகவே பூருவர்கள் வியாக்கியானித்தருளினார்கள்.

இரண்டாமடியில் “அலர்ந்தேன்” என்கிற பாடம் பிழையுடைத்து; ‘அலந்தேன்’ என்றே யிருக்கத்தக்கது.  பெரிய திருமொழியில் “அலந்தேன் வந்தடைந்தேன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.  அலமந்தேன் என்றவாறு.

 

English Translation

Tears welling, felling low, I roam and look around.  Alas, I do not see my Lord of discus conch coming. With proper mind’s eye I shall see and enjoy the great icon of pure knwoeldge, light of the Vedas

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top