(3132)

(3132)

முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,

அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,

வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,

எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?

 

பதவுரை

முந்நீர் ஞாலம் படைத்த

கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும்

எம் முகில் வண்ணனே

மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே!

அ நாள்

அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில்

நீ தந்த

நீ கொடுத்தருளின

ஆக்கையின்

சரீரத்தினுடைய

வழி

வழியிலேயே

உழல்வேன்

நடந்துகேட்டுத் திரிகின்றேன்

வெம்நாள்

(உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே

நோய் வீய

வியாதிகள் தீரும்படி

வினைகளை

கரும பந்தங்களை

வேர் அறுபாய்ந்து

வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று

யான்

அடியேன்

உன்னை

(மஹோபகாரனான) உன்னை

இனி எந்நாள் வந்து கூடுவன்

அடையப் பெறுவது இனி என்றைக்கோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.

எம்முகில் வண்ணனே: = எம்பெருமான் உலகங்களைப் படைத்ததெல்லாம் ஆழ்வார் தமக்காகவே யென்று கொண்டிருக்கின்றமை எம் என்பதனால் தொனிக்கும். முகிலுக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம் நிறத்தினால் மாத்திரமன்று; தன்மைகள் பலவற்றாலுங் காண்க.

பின்னடிகளின் கருத்து:- உன்னைப் பிரிந்து தரிக்க கில்லாமல் செல்லுகிற நாளில், பிரிந்து நோவுபடுகைக்கீடான பாவங்களை வேரறுத்து உன்னடி சேர்ந்து உய்வது

 

English Translation

O cloud-hued Lord, you made the Earth and Ocean!  This body you have me then drags on painfully, O, when will I cut my Karmas by the root, when end this wretched life and join you?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top