(3131)
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.
பதவுரை
|
வியப்பு ஆய |
– |
(அந்யத்ர) ஆச்சர்யகரமானவை |
|
வியப்பு இல்லா |
– |
(தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும் |
|
மெய் ஞானம் வேதியனை |
– |
(மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை, |
|
சயம் புகழார் பலர் வாழும் |
– |
ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான |
|
தடம் குருகூர் |
– |
பெரிய திருநகரிக்குத் தலைவரான |
|
சடகோபன் |
– |
ஆழ்வார் |
|
தொழுது |
– |
ஸேவித்து |
|
துயக்கு இன்றி |
– |
அவத்ய மொன்று மின்றியே |
|
உரைத்த |
– |
அருளிச்செய்த |
|
ஆயிரத்துள் |
– |
ஆயிரத்தினுள்ளே |
|
இ பத்தும் |
– |
இத்திருவாய்மொழி |
|
ஒலி முந்நீர் ஞாலத்து |
– |
ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில் |
|
உய கொண்டு |
– |
(உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி |
|
பிறப்பு அறுக்கும் |
– |
ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வியப்பாய வியப்பில்லா = வேறொரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படத்தக்கவையெல்லாம் இங்கே கண்டால் ‘இது என்ன ஆச்சரியம்’ என்று உபேக்ஷிக்கும்படியாயிருக்குமென்க. உலகத்தில் ஒருவனுக்கு நாலு பசுக்கள் கொடுத்தானென்றால் அது ஆச்சரியப்படத்தக்கதாயிருக்கும்; பெருமாள் ஒருவனுக்குப் பதினாயிரம் பிசுக்கள் கொடுத்தாரென்றாலும் ஆச்சரியப்படுதற்கு விஷயமில்லையே. ஸ்ரீராமாயண- அயோத்யா காண்டத்தில் முப்பத்திரண்டாம் ஸர்க்கத்திற் கூறப்பட்டுள்ள த்ரிஜட வ்ருத்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கதாகும்.
மெய்ஞ்ஞான வேதியனை = உள்ளது உள்ளபடியே பிரதிபாதிக்குமதான வேதத்தினால் போற்றப்படுபவன் என்க. சாயப்புகழார் = ஜயம் என்ற வடசொல் சயமெனத் திரிந்தது; ஸம்ஸாரத்தை வென்று அதனால் புகழ்பெற்றவர்கள் (விரக்தர்கள்) பலர் வாழுமிடமாம் திருக்குருகூர்.
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரம்- எந்த அர்தத்திலும் ஸந்தேஹவுணர்ச்சியும் விபரீத வுணர்ச்சியு மின்றிக்கே ஸகலார்த்தங்களையும் ப்ரத்யக்ஷீகரித்துப் பேசின ஆயிரம். அதில் இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத்கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.
உயக்கொண்டு- உய்யக்கொண்டு
English Translation
This decad of the perfect thousand sons by Satakopan of Kurugur, -where godly men reside, -addresses the wonder-Lord extolled by the Vedas, Those who can sing it will break the cords of rebirth and secure heaven.
