(2895)

(2895)

செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்

விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்

தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.

 

பதவுரை

செழு திரை பால் கடல்

அழகிய அலைகளையுடைய திருப்பாற் கடலில்

கண் துயில்

பள்ளிகொண்டிராநின்ற

மாயன்

ஸர்வேச்வரனாடைய

திரு அடி கீழ்

திருவடிகளின் கீழே

விழுந்து இருப்பார்

விழுந்துகிடக்கும் மஹான்களுடைய

நெஞ்சில்  மேவும்

ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற

நல் ஞானி

சிறந்த ஞானியாயும்

நல்வேதியர்கள் தொழும் திரு பாதன்

நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற

இராமாநுசனை

எம்பெருமானாரை

தொழும்

ஸேவிக்கின்ற

பெரியோர்

மஹாத்மாக்கள்

எழுந்து இரைத்து ஆடும் இடம்

உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக்கொண்டு கூத்தாடும் இடம்

அடியேனுக்கு இருப்பு இடம்

அடியேன் வஸிக்குமிடமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் வாசியற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரமபதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜபக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

 

English Translation

Devotees who fall at the feet of the ocean-reclining wonder-lord consider Ramanuja as the enlightened one.  Vedic scholars worship his lotus feet. Great souls cry out his name and dance.  All those places where they live are holy to me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top