(2879)
போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ்தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
ஏற்றமென் றேகொண் டிருக்கிலுமென் மனம்ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.
பதவுரை
|
போற்ற அரு சீலத்து |
– |
புகழ்ந்து தலைக்கட்டமுடியாத சீல குணத்தையுடைய |
|
இராமாநுச |
– |
எம்பெருமானாரே; |
|
நின் புகழ் |
– |
தேவரீருடைய திருக்குணங்களை |
|
தெரிந்துசாற்றுவனேல் |
– |
உணர்ந்து பேசுவேனாகில் |
|
அது |
– |
(நீசனாகிய நான் ) பேசுகிறவது |
|
தாழ்வு |
– |
(தேவரீருக்கு) அவத்யமாம்; |
|
அது தீரில் |
– |
அப்படி நான் பேசுவது தவிர்த்தல் |
|
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம் |
– |
தேவரீருடைய திருக்குணங்களுக்கு மேன்மையாகும் |
|
என்றே கொண்டு இருக்கிலும் |
– |
என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும் |
|
என் மனம் |
– |
எனது நெஞ்சானது |
|
எத்தி அன்றி |
– |
(தேவரீருடைய திருக்குணங்களைப்) புகழ்ந்தல்லது |
|
ஆற்ற கில்லாது |
– |
தரித்திருக்க மாட்டாது; |
|
இதற்கு |
– |
இவ்விஷயத்திலே |
|
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன் |
– |
தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன். |
English Translation
O Ramanuja of glory beyond praise! If I praise you thinking I know your great merit, it is mean praise. If I give up, saying it is beyond me, that indeed is fair praise, knowing this, my heart still does not satiate praising you, I fear what you may think of me.
