(2878)
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.
பதவுரை
|
கலி மிக்க |
– |
நிலவளம் மிகுந்த |
|
செந்நெல் கழனி |
– |
செந்நெல்கழனிகளை யுடைய |
|
குறையல் |
– |
திருக்குறையலூரில் அவதரித்தவராய் |
|
கலை பெருமான் |
– |
சாஸ்த்ர மென்னும்படியான திவ்யப்ரபந்தகளையருளிச் செய்த் திரு மங்கையாழ்வாருடைய |
|
மிக்க ஒலி பாடலை |
– |
அதிசயித்த இசையையுடைய பெரிய திருமொழியை |
|
உண்டு |
– |
அநுபவித்து |
|
தன் உள்ளம் தடித்து |
– |
தமது திருவுள்ளம் |
|
அதனால் வலி மிக்கம் |
– |
அத்தால் மிடுக்குஅதிகரித்த |
|
சீயம் |
– |
சிங்கம் போன்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார், |
|
மறை வசதியர் ஆம் புலி மிக்கது என்று இப்புவனத்தில் வந்தமை |
– |
வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை |
|
போற்றுவன் |
– |
புகழ்ந்திடக் கடவேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.
English Translation
When the tigers of heretic thoughts roamed everywhere freely, Ramanuja came as a lion unto them, strengthened of heart by the Pann-based songs of fertile Kuraiyalur’s king kalikanri. I bow to him.
