(2845)
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.
பதவுரை
|
தொகை இறந்த |
– |
கணக்கில்லாத |
|
பண்தரு வேதங்கள் |
– |
ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள் |
|
பார் மேல் |
– |
இப்பூமியிலே |
|
நிலவிட |
– |
ஒங்கி வளரும்படி |
|
பார்சதருளும் |
– |
செய்தருளினவரும் |
|
கொண்டலை |
– |
பரம உதாரரும், |
|
கண்டவர் சிந்தைகவரும் |
– |
கணடவர்களின் நெஞ்சைக் கவாகின்ற |
|
கடி பொழில் |
– |
மணமிக்க சோலைகள் சூழ்ந்த |
|
தென் அரங்கன் |
– |
தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால் |
|
குலாவும் |
– |
கொண்டாடப்படுபவருமான |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
மேலி கொழும் குடி |
– |
பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் |
|
எங்கள் கோக்குலம் ஆம் |
– |
எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடியகுலமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது
இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.
கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள்கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே.
English Translation
The devotees of the Lord of Southern Arangam, -surrounded by attractive fragrant groves, -rejoiced in singing the praise of Ramanuja who established the singing tradition of the Tamil Vedas. Those who worship him as their benevolent raincloud are our hereditary masters!
