(2845)

(2845)

கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.

 

பதவுரை

தொகை இறந்த

கணக்கில்லாத

பண்தரு வேதங்கள்

ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள்

பார்  மேல்

இப்பூமியிலே

நிலவிட

ஒங்கி வளரும்படி

பார்சதருளும்

செய்தருளினவரும்

கொண்டலை

பரம உதாரரும்,

கண்டவர் சிந்தைகவரும்

கணடவர்களின் நெஞ்சைக் கவாகின்ற

கடி பொழில்

மணமிக்க சோலைகள் சூழ்ந்த

தென் அரங்கன்

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்

குலாவும்

கொண்டாடப்படுபவருமான

இராமாநுசனை

எம்பெருமானாரை

மேலி கொழும் குடி

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்

எங்கள் கோக்குலம் ஆம்

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடியகுலமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள்கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே.

 

English Translation

The devotees of the Lord of Southern Arangam, -surrounded by attractive fragrant groves, -rejoiced in singing the praise of Ramanuja who established the singing tradition of the Tamil Vedas.  Those who worship him as their benevolent raincloud are our hereditary masters!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top