(2820)
இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே.
பதவுரை
|
தொல் உலகில் |
– |
‘அநாதியான இவ்வுலகத்தில் |
|
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின் |
– |
நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’ |
|
என மொழிந்த |
– |
என்று (=பாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த |
|
அன்பன் |
– |
பரமகாருணிகராய் |
|
அனகன் |
– |
நிர்த்தோஷரான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என்னை ஆண்டனன் |
– |
என்னை அடிமைகொண்டருளினார்; |
|
(ஆனபின்பு) |
||
|
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் |
– |
ஆநந்தாவஹமான மோக்ஷம்வந்து ஹித்தித்தாலெனன? |
|
எண் இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என் |
– |
அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்துகொண்டால்தான் என்ன? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளப்பெற்றபின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.
நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் வகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.
English Translation
Ramanuja, the faultiess one, the friend, discoursed that the wonder-Lord Krishna is the Lord of all beings in the Universe. He became my heart’s master, Now, how does it matter whether I enjoy the pleasures of heaven or suffer the pains of hell?
