(2820)

(2820)

இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த

துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்

மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த

அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே.

 

பதவுரை

தொல் உலகில்

‘அநாதியான இவ்வுலகத்தில்

மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின்

நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’

என மொழிந்த

என்று (=பாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த

அன்பன்

பரமகாருணிகராய்

அனகன்

நிர்த்தோஷரான

இராமாநுசன்

எம்பெருமானார்

என்னை ஆண்டனன்

என்னை அடிமைகொண்டருளினார்;

(ஆனபின்பு)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்

ஆநந்தாவஹமான மோக்ஷம்வந்து ஹித்தித்தாலெனன?

எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என்

அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்துகொண்டால்தான் என்ன?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளப்பெற்றபின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.

நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் வகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.

 

English Translation

Ramanuja, the faultiess one, the friend, discoursed that the wonder-Lord Krishna is the Lord of all beings in the Universe.  He became my heart’s master, Now, how does it matter whether I enjoy the pleasures of heaven or suffer the pains of hell?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top