(2819)

(2819)

கூட்டும் விதியென்று கூடுங்கொலோ,தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்

வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே?

 

பதவுரை

தென் குருகை பிரான்

நம்மாழ்வாருடைய

பாட்டு என்னும்

பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய்

வேதம்

வேதரூபமாய்

பசும் தமிழ்தன்னை

செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை

தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த

தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய

இராமாநுசன்

எம்பெருமானாருடைய

புகழ்

கல்யாண குணங்களை

மெய் உணர்ந்தோர்

உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய

ஈட்டங்கள் தன்னை

கோஷ்டிகளை

என் நாட்டங்கள் கண்டு

என் கண்களானஸ்வ ஸேவித்து

இன்பம் எய்திட

ஸூகிக்கும் படியாக

கூட்டும் விதி

அமைக்கவல்ல (அவருடைய) க்ருபையானது

என்று கூடுங்கொவ்

என்றைக்கு வாய்க்குமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தியுடன் பரவும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹான்களுடைய சேஷ்டிகளை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும் படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

தன்பத்தி யென்னும் வீட்டின்கண் வைத்த = விலையுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக் கொண்டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச்செயலைத் தம்முடைய பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக் கொண்டிராநின்ற உடையவர் என்றபடி. நாட்டம் – கண்.

 

English Translation

Ramanuja firmly established the Bhakti path, in which the famed Tamil Vedas, -the sweet songs of Southern Kurugar city’s king, -are the means of union with the divine.  O when will my eyes rejoice and see bands of devotees who realise the truth in this!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top