(2810)

(2810)

ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே.

.

பதவுரை

ஆரம் பொழில்

சந்தனச் சோலைகளையுடைய

தென் குருகை

அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த)

பிரான்

மஹோபகாரகரான ஆழ்வாருடைய

அமுதம் திருவாய்

பரமபோக்யமான திருப்பவளத்தில்பிறந்த

ஈரம் தமிழன் இசை

ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை

உணர்ந்தோர்கட்கு

அறிந்தவர்களுக்கு

இனியவர் தம்

இஷ்டராயிருப்பவர்களுடைய

சீரை

குணங்களை

பயின்று

அப்யஸித்து

உய்யும் சீலம் கொள்

ஸத்தை பெறும் சீலத்தையுடையரான

நாதமுனியை

நாதமுனிகளை

நெஞ்சால்

தம் திருவுள்ளத்தாலே

வாரி பருகும்

அபிநிவேசத்தோடு அனாபவிக்கின்ற

இராமாநுசன்

எம்பெருமானார்

என் தன் மாநிதி

எனக்கு அக்ஷயமான நிதி.

 

English Translation

Nathamuni exulted in worshipping the sweet poet Madurakavi, who knew the art of singing the Rasa-laden words of the delightful Tiruvaimoil be queathed by the lord of flower-groves-surrounded southern kurugur king Satakopan. Ramanuja who filled his heart with love for Nathamuni, is our great wealth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top