(2192)

(2192)

கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்

இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற

நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை

ஆரோத வல்லார் அவர்.

 

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)

அமரக் கடை நின்று

தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று

நாளும்  கழல் தொழுது

நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து

(பரமாநந்தம் பெறமாட்டாமல்)

இடைநின்ற இன்பத்தர் ஆவர்

நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;

புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே

(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,

நின் அடியை

உனது திருவடிகளை

ஓதவல்லாரவர் ஆர்

அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார்.

கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க.  கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது – அவர்களை ஆராதித்தமை கூறியவாறு.  இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம்.  இடைநின்ற வின்பத்தராவர் – எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது.  இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம்.  ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.

 

English Translation

Filled with love, I stand with flowers and proper chants. O Protector! As a child you destroyed a cart, Asking for land you protected the earthlings Pray correct my ways.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top