(1775)

(1775)

அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,

சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,

உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை

புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.

 

பதவுரை

அலமும் ஆழிபடையும் உடையார்

காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான்

நமக்கு

நம் விஷயத்திலே

அன்பர் ஆய்

அன்புடையவர் போன்றவராய்

சலம் அது ஆகி

கபடத்தையுடையவராகி

தகவு ஒன்று இலர்

சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார்

(அவர் அப்படியிருந்தாலும்)

உலவு கால்

உலாகின்ற தென்றல் காற்றையுடைய

நல் கழி

நல்ல கழிகளிலே

ஓங்கு தண் பை பொழிலூடு

உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே

புலவு கானல் களிவண்டு இனம்

புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது

இசை பாடு

இசைபாடப்பெற்ற

புல்வாணி

திருப்புல்லாணியை

(நெஞ்சே!) நாம் தொழுதும் எழு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலப்பையையும் சக்கரத்தையும் திவ்யாயுதமாகக் கொண்டவர் நமக்கு எளியவராகத் தகாதவர் ;இவரே நமக்கு ப்ராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர். அப்படிப்பட்டவர் தாமே அன்புடையவர் போலேவந்து கலந்து, அத்தனையும் கபடமாகவே தலைக்கட்டிற்றாகி ;ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோம், என்று சிறிது இரக்கமும் இல்லாதவராயிருக்கின்றார். அவர் தாம் இரங்கிற்றிலர் என்று நாம உதாஸீநமாக இருந்துவிட முடியுமோ? பரதாழ்வான் ;சித்திரகூடத் தேறச் சென்று பெருமாள் திருவடிகளிலே தலையை மடுத்தாகிலும் இரங்கச் செய்வித்துக கொள்வோம்; என்று பாரித்து அங்ஙனே செய்தாற்போலே நாமும் திருப்புல்லாணியே சென்று தொழுதாகிலும் அவரை இரங்குவித்துக் கொள்வோம், நெஞ்சே! புறப்படு என்கிறாள்.

உலவு கானல் கழி-உலவு கால் நல்வழி என்று பிரிக்க. கால்-காற்று என்றும் நீர்க்கால் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

English Translation

O Heart! The Lord who wields the plough and discus came as a friend and left as a deceiver; he has no compassion. He resides in Pullani by the sea, land of separated lovers, -amid cool enchanting rivulets in the groves where happy bees swarm and sing.  Bow that-a-ways and arise

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top