(1745)
மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்
பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்
காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
பதவுரை
|
கண்ணபுரத்துறை அம்மானே!- ; |
||
|
மாண் ஆகி |
– |
(முன்பு) வாமநப் பிரமசாரியாகி |
|
வையம் |
– |
உலகங்களை |
|
அளந்ததுவும் |
– |
அளந்துகொண்டதையும் |
|
வாள் அவுணன் |
– |
வாள்கொண்ட இரணியாசுரனுடைய |
|
பூண் ஆகம் |
– |
ஆபரணங்களணிந்தமார்பை |
|
கீண்டதுவும் |
– |
கிழித்தெறிந்ததையும் |
|
ஈண்டு |
– |
இப்போது |
|
நினைத்திருந்தேன் |
– |
நான் அநுஸந்திக்கின்றேன்; |
|
பேணாத |
– |
ஆத்மோஜ்ஜீவநத்துக்கு ஒரு நன்மையும் செய்து கொள்ளாதவனும் |
|
வல் வினையேன் நான் |
– |
வலியபாபங்களையுடையவனுமான நான் |
|
இடர் எத்தனையும் |
– |
துளி பாவத்தையும் |
|
காணேன் |
– |
(என்னிடத்தில்) காண்கிறேனில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பேணாத தேஹத்திற் காட்டில் வேறுபட்டவனான ஆத்மா ஒருவன் உண்டென்று நினைத்து அவனுக்கு உரிய நன்மைகளை நாடாதவனாயிருந்தவன் நான் என்றபடி.
English Translation
O Lord of kannapuram! I was thinking of how you came as a manikin and measured the Earth, how you tore apart the weaponed Hiranya’s ornamented chest. Lo! This meritless sinner’s sins are nowhere to be seen!
