(1677)

(1677)

தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்

வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,

காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,

நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.

 

பதவுரை

தே மருவு

தேன் பொருந்திய

பொழில்

சோலைகளினால்

புடை சூழ்

நாற்புறமுஞ் சூழப்பட்ட

திருக்கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்தில்

உறையும்

நித்யவாஸம் பண்ணுகிற

வாமனனை

வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து,

மறி கடல் சூழ்

அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு

வயல் வளம்

வயல் வளங்களையு முடைத்தான

ஆலி நாடன்

திருவாலிநாட்டுக்குத் தலைவரும்

காமரு சீர்

விரும்பத்தக்க குணங்களையுடையவருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார்

கண்டு உரைத்த

ஆராய்ந்து அருளிச்செய்த

தமிழ் மாலை இவை

இத்தமிழ்ப் பாசுரங்களை

நாமருவி

நாவிலே பொருந்தவைத்து

பாட

பாடுமளவிலே

வினை ஆய

பாபமென்று உள்ளவை யெல்லாம்

நண்ணா

கிட்டாதே ஒழிந்துபோம்

.

English Translation

This garland of sweet Tamil songs by adorable kalikanri, kink of the fertile fields-surrounded Tiruvali, sings of the bridegroom of Tirukkannapuram surrounded by nector-dripping graves.  Those who master it will be freed of karmas.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top