(1676)

(1676)

வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,

சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,

பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்

பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.

 

பதவுரை

வார் ஆளும் இளகொங்கை

கச்சினால் தாங்கப்படுகின்ற இள முலைகளையுடையளாய்

நெடு பணை தோள்

நீண்ட மூங்கில் போன்ற தோள் களையுடையளாய்

மடம்

ஆத்மகுணங்களால் நிறைந்தவளாய்

பாவை

பதுமை போன்றவளான பெரிய பிராட்டியார் (நித்யவாஸம் பண்ணப் பெறுகையினாலே)

சீர் ஆளும்

சீர்மையை யுடைத்தான

வரை

மலைபோன்ற

மார்பன்

திருமார்பையுடையவனும்

திருக்கண்ணபுரத்து, உறையும்-;

பேர் ஆளன்

பெருமை பொருந்தியவனும்

ஆயிரம் பேர்

ஆயிரந்திருநாமங்களை யுடையவனும்

ஆயிரம் வாய்

ஆயிரம் முகங்களையுடைய

அரவு

ஆதிசேஷனாகிற

அணை மேல்

படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான

பேராளர் பெருமானுக்கு

தேவாதி தேவனுக்கு

என் பெய் வளை இழந்தேன்-.

பெய்வளை

அணிந்துக்கொண்டிருந்தவளை.

பேராளர் பெருமான் பேராளரென்று மஹான்களுக்குப் பெயர்; அவர்கட்கும் மஹான் என்றபடி.

 

English Translation

The well corsetted tender-breasted Bamboo-like-arms-lady of the Lakshmi, resides on the mountain-like chest of the Lord in Tirukkannapuram, He is the Lord with a thousand names, reclining on a serpent of a thousand hoods.  Alas, I have lost my beautiful golden bangles to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top