(1670)
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.
பதவுரை
|
துங்கம் மா மணி |
||
|
மாடம் நெடுமுகட்டின் சூலிகை |
– |
உந்நதமாய் சிறந்த ரத்னங்களிழைக்கப் பெற்றதான மாடமாளிகைகளினுடைய நீண்ட உச்சியிலுள்ள சூலமானது |
|
போம் திங்கள் |
– |
மேலே சஞ்சரிக்கின்ற சந்திரனையும் |
|
மா முகில் |
– |
பெரிய மேகங்களையும் |
|
துணிக்கும் |
– |
துண்டிக்கப் பெற்ற |
|
திருக்கண்ணபுரத்து, உறையும்-; |
||
|
பைங்கண் மால் விடை அடர்த்து |
– |
பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும் |
|
பனி மதி கோள் விடுத்து |
– |
குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி |
|
உகந்த |
– |
திருவுள்ள முவந்தவனாயும் |
|
செங்கண் மால் அம்மானுக்கு |
– |
புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே |
|
என் செறி வளை |
– |
என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை |
|
இழந்தேன்-. |
||
English Translation
Tirukkannapuram has mountain-like jewelled mansions that touch the sky overcast with dark laden clouds and the smoke of Agli-wood. Here resides the Lord who slelpt on a striped serpent; he also smote an angry rutted elephant and plucked out its tusk. Alas, I have lost my beautiful golden bangles to him.
